முகப்பு
இந்தியா

குவைத்தில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை தாயகம் வந்தடையும்! மத்திய அரசு தகவல்!

குவைத்தில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை தாயகம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவிப்பு...

Updated On : 4 ஜூன் 2026, 6:52 pm IST
தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம் - x
பகிர்:

குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை (ஜூன் 5) இந்தியா வந்தடையும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், குவைத் விமான நிலையத்தின் மீது கடந்த புதன்கிழமை (ஜூன் 3) அன்று நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் (வளைகுடா நாடுகள்) அசீம் ஆர் மஹாஜன் இன்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“குவைத்தில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்துள்ள 13 இந்தியர்களும் குவைத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் தொடங்கியது முதல் வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களில் இதுவரை 10 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Ministry of External Affairs has announced that the body of the Indian national killed in the attack on Kuwait Airport will arrive in India tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.