கேரளம்: மாநிலத்தின் வருவாயில் 77% ஓய்வூதியம், வட்டிக்கு மட்டுமே செலவிடப்படுகிறதாம்...
கேரள மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து...
கேரள மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநில சட்டப்பேரவையின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, வி.டி. சதீசன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி, கேரளத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையும் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலைமை வெள்ளை அறிக்கை குறித்து மாநில முதல்வர் வி.டி. சதீசன் கூறியிருப்பதாவது, "சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதி வெள்ளை அறிக்கை ஓர் அரசியல் ஆவணம் அல்ல; மாநிலத்தின் நிதி நிலை குறித்த உண்மை அடிப்படையிலான மதிப்பீடு ஆகும்.
மாநிலத்தின் நிலுவையிலுள்ள மொத்த பொதுக் கடன் ரூ. 5.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.5 சதவிகிதமாகும்.
மாநிலத்தின் வருவாயில் 77 சதவிகிதம் - ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுவதால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல்வர் விஜய்யும் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.