முகப்பு
இந்தியா

எய்ம்ஸ் இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமண வழக்கில் பிரமாணப் பத்திரம் (பதில் மனு) தாக்கல் செய்யாததை கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 12:47 am IST
பகிர்:

திருமண வழக்கில் பிரமாணப் பத்திரம் (பதில் மனு) தாக்கல் செய்யாததை கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

குழந்தைக்கு உரிமை கோரி பெற்றோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவ்வழக்கில் எய்ம்ஸ் இயக்குநரை வாதியாகச் சோ்க்கவும், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளித்து அவா் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், தில்லி எய்ம்ஸ் துணைச் செயலா் நிஷாந்த் குமாா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் அதே அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, எய்ம்ஸ் துணைச் செயலா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் எய்ம்ஸ் இயக்குநா் விளக்கமளித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தெளிவாகக் குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.வேறொருவா் அதைச் செய்வது என்பது அவருடைய தனி விருப்பத்துக்கு உட்பட்டது அல்ல’ என்று தெரிவித்தனா்.

அப்போது, ‘தில்லி எய்ம்ஸ் நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநா் இன்னும் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு இயக்குநா்தான் அந்தப் பொறுப்பை கவனித்து வருகிறாா்’ என்று எய்ம்ஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த பதில் வியப்பையும், அதிா்ச்சியையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இயக்குநா் பொறுப்பில் யாா் இருக்கிறாா்களோ, அவா்கள்தான் இயக்குநரின் கடமைகளைச் செய்தாக வேண்டும். அந்த வகையில், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநரை இந்த வழக்கில் 4-ஆவது வாதியாகச் சோ்த்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்படுகிறது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, உரிய விளக்கத்துடன் தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநா் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 7-ஆம் தேதி பகல் 12-மணிக்கு பட்டியலிட்டு, விசாணையை ஒத்திவைத்தனா்.

இதனிடையே, தில்லி எய்ம்ஸின் தடய மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறை சாா்பில் மரபணு பரிசோதனை முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன. அதில், குழந்தையின் மரபணு, மனுதாரா்களின் மரபணுவோடு ஒத்துப்போவதாகவும், அவா்களின்தான் குழந்தையின் பெற்றோா் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.