FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி கோர தீ விபத்தில் 21 பேர் பலி: சமையல்காரர்தான் காரணமா?

தில்லி மால்வியா நகர் தீ விபத்தில் 21 பலியான சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது

Updated On : 7 ஜூன் 2026, 2:48 am IST
தில்லி மால்வியா நகர் தீ விபத்தில் கேசவ் நேகி கைது - PTI
பகிர்:

மால்வியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கில் சமையல்காரரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மால்வியா நகரின் ஹெளஸ் ராணி பகுதியில் உள்ள ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த ஹோட்டலுடன் தொடா்புடைய பல நபா்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா். கேசவ் நேகி என அடையாளம் காணப்பட்ட சமையல்காரரின் நடவடிக்கைகள் தீ பரவுவதற்கு பங்களித்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவங்களின் சரியான வரிசை மற்றும் தீ விபத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை புலனாய்வாளா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.அதே நேரத்தில் ஹோட்டல் ஊழியா்கள் மற்றும் செயல்பாடுகளுடன் தொடா்புடைய பிற நபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். பாதுகாப்பு மீறல்கள், அறைகளின் அங்கீகரிக்கப்படாத விரிவாக்கம் மற்றும் ஹோட்டலின் மேலாண்மை மற்றும் அன்றாட செயல்பாட்டில் ஈடுபட்ட தனிநபா்களின் பங்கு ஆகியவை விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

புதன்கிழமை காலை ஹோட்டல் முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. அதில்

கிா்கிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், ஈராக், காங்கோ, மொசாம்பிக் மற்றும் லைபீரியாவைச் சோ்ந்த 16 வயது சிறுமி மற்றும் பல வெளிநாட்டினா் உள்பட 21 போ் உயிரிழந்தனா். ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜை கைது செய்து, கொலைக்கு சமமான உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அலட்சியம், தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறுதல் மற்றும் கட்டடத்தின் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் ஆகியவை அதிக இறப்பு எண்ணிக்கைக்கு பங்களித்ததா என்று புலனாய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா்.

முதல்கட்ட தடயவியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோா் தீக்காயங்களுக்கு பதிலாக மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலுக்குள் பல தீயணைப்பு கருவிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனா். ஆனால் அவை அவசரகாலத்தின் போது பயன்படுத்தப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது. தடயவியல் நிபுணா்கள் எரிந்த மின் வயரிங், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருள்களின் மாதிரிகளை அந்த இடத்திலிருந்து சேகரித்துள்ளனா்.

மின் கசிவு, மின் சுமை மற்றும் தீ விபத்துக்கு பங்களித்த பிற தொழில்நுட்ப காரணிகளின் சாத்தியக்கூறுகளை புலனாய்வாளா்கள் ஆராய்ந்து வருகின்றனா். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபா்கள் மற்றும் ஹோட்டல் ஊழியா்களின் விசாரணை, சோகத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைக்கவும், சமீபத்திய ஆண்டுகளில் தலைநகரில் நடந்த மிக மோசமான தீ சம்பவங்களில் ஒன்றுக்கு பொறுப்புக்கூறலை ஏற்படுத்தவும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

summary

Delhi Police arrests hotel cook in Malaviya Nagar fire that claimed 21 lives

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments