மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!
மொஹாலியில் அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!
சண்டிகரின் மொஹாலி நகரில் அமைந்துள்ள ஒரு அலுவலகத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கத்தியால் 34 முறை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் ஒரு சில நாள்களில், அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.