முகப்பு
இந்தியா

தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றியவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றிய மெத்தைக் கடை உரிமையாளர் ரியாசுதீனுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

Updated On : 6 ஜூன் 2026, 6:10 pm IST
தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றியவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி - கோப்புப் படம்
பகிர்:

தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றிய மெத்தைக் கடை உரிமையாளர் ரியாசுதீனுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், கட்டடத்தின் அடித்தளத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, சிலர் வேறு வழியின்றி ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்தனர்.

இதனிடையே, ஹோட்டலின் எதிரே மெத்தை கடை வைத்திருந்த ரியாசுதீன் என்பவர், ஹோட்டலின் மேலிருந்து கீழே விழுபவர்களுக்கு காயமடையாமலிருக்க, தன் கடையிலிருந்த மெத்தைகளை சாலையில் பரப்பி உதவினர்.

சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மெத்தைகளை ரியாசுதீன் சாலையில் பரப்பியதன் மூலம், தீ விபத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாகக் கீழே குதித்து காப்பாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், ரியாசுதீனின் மனிதநேயத்துக்காக அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

summary

Shopkeeper Riyazuddin who saved lives in Malviya Nagar fire incident receives ₹1 lakh financial aid

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.