முகப்பு
இந்தியா

கோவாவில் இறந்து கிடந்த சிறுத்தைக்குட்டி: விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

கோவாவில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 ஜூன் 2026, 11:45 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கோவாவில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநிலம், பல்யே கிராமத்தில் உள்ள பகத்வாடா பகுதியில் சனிக்கிழமை இரவு சிறுத்தைக்குட்டி இறந்து கிடப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டறிந்தனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த வனத் துறையினர் சிறுத்தைக்குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கமல் தத்தாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, மே 2ஆம் தேதி கோவாவின் குஷாவதி மாவட்டத்தில் உள்ள பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே புலியின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

summary

A leopard cub has been found dead in North Goa district, prompting the state government to order an inquiry into the matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.