போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் மமதா வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனை செய்தது பற்றி...
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) சோதனை செய்தனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள்ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை அங்கீகரிப்பதற்காக சட்டப்பேரவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவில், திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கையொப்பங்கள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக சிடிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மமதா பானர்ஜியின் வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது, மமதா பானர்ஜியும், அபிஷேக் பானர்ஜியும் தில்லியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.