நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை : பிரதமர் மோடி
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற கூட்டத்தில் பேச்சு...
நாட்டின் நீண்ட கால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் விதமாக தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மருத்துவத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சஞ்சய் ஜா, சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான், ஜனசக்தி கட்சியின் தலைவர் பவன் கல்யாண், ஜித்தன் ராம் மாஞ்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement