மேக்கேதாட்டு அணை: மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்த டி.கே. சிவகுமார்!
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சந்தித்தது பற்றி..
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று(ஜூன் 12) சந்தித்து மனு அளித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக இன்று அவர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து மனு அளித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றது முதல் மேக்கேதாட்டு விவகாரத்தில் அவர் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.