ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல் வீச்சு
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல்லெறிந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவரான மோகன் பாகவத், கான்பூரிலிருந்து தில்லி நோக்கிச் சென்ற ஸ்வர்ண சதாப்தி விரைவு ரயிலில் (12003) வியாழக்கிழமை பயணம் செய்தார்.
இந்த நிலையில், ஃபிரோசாபாத் மாவட்டம் வழியாகச் சென்றபோது, மோகன் பாகவத் இருந்த இ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் எறிந்துள்ளார். கல் எறிந்ததில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆக்ரா மண்டல கூடுதல் டிஜிபி, ஆக்ரா சரக டிஐஜி ஆகியோர் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் பெட்டியின் மீது கல்லெறிந்த அடையாளம் தெரியாத நபரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Stone pelted at Shatabdi Express near Firozabad with RSS Chief Mohan Bhagwat on board
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.