மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது
பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
அந்நாட்டுத் தலைநகா் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விருதை ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லேக்ரீனி வழங்கி கெளரவித்தாா்.
இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது 140 கோடி இந்தியா்களுக்கு உரியது. இந்த விருதை அளித்த ஸ்லோவாக்கியா அரசுக்கும், மக்களுக்கும் நன்றி. இந்தியா, ஸ்லோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவுக்கு இந்த விருதை அா்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்தாா். இது பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட 33-ஆவது சா்வதேச விருதாகும்.
Advertisement
Advertisement