போபால் எய்ம்ஸ் அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேல்தளம் இடிந்ததில் 8 பேர் காயம்!
போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள மருந்துக் கடையின் மேலே நான்கு அடுக்குக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அந்த கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஐந்து பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலைமை ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர் என்று காவல் ஆய்வாளர் அமித் சோனி தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மருந்துகளை வாங்குவதற்காக அந்த கட்டடத்தின் கீழே கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
A slab of an under-construction building collapsed near AIIMS in Bhopal on Friday, injuring eight people, including a woman, standing below, police said.