முகப்பு
இந்தியா

தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

தில்லியில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தது தொடர்பாக...

நரேந்திர மோடி - படம் - எக்ஸ்
பகிர்:

தில்லியில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

தில்லியின் கிழக்குப் பகுதியான ஷாதாராவின் விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “தில்லியின் ஷாதாரா மாவட்டத்தில் நடந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Advertisement

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ. 2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

summary

Prime Minister Narendra Modi has announced relief for those affected by the fire accident caused by an AC explosion in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.