5 நாள் சுற்றுப் பயணம்: நெதர்லாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
5 நாள் சுற்றுப் பயனத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றது குறித்து...
ஐந்து நாள் சுற்றுப் பயனத்தின் இரண்டாவது நாளில் நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாம் பெரண்ட்சன் மற்றும் இந்திய தூதர் குமார் துஹின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயனத்தின் முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானைச் சந்தித்தார்.
Advertisement
இந்த நிலையில், தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.