பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து...
பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் நான்கு வயது சிறுவன் (குர்கரன் சிங்) தவறுதலாக விழுந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை அந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கின. ஆழ்துளைக் கிணற்றின் ஆழம், சுமார் 20 முதல் 30 அடி வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டதோடு, கேமரா வழியாக அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்ட தீவிர ஒன்பது மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மேலும், அந்தச் சிறுவனை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
A boy who accidentally fell into a borewell in Punjab was safely rescued.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.