பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து
பிகாரில் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
பிகாரில் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
பிகார் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சசாரம்-பாட்னா பயணிகள் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Advertisement
தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எந்தப் பயணியும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. மின்கசிவு காரணமாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று மத்திய பிரதேசத்தில் ராஜதானி விரைவு ரயிலின் ஏ.சி. பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
A major fire broke out in a coach of the Sasaram-Patna passenger train at Sasaram railway station in Bihar’s Rohtas district on Monday while the train was stationed at the platform, officials said.