முகப்பு
இந்தியா

தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம்: ரேபரேலியில் ராகுல்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி ராகுல்காந்தி கூறுவது..

ராகுல் காந்தி - congress
பகிர்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி தெரிவித்தார்.

ராகுலின் இரண்டாவது நாள் பயணத்தின் முக்கியத்துவமாக, புரட்சியாளர் வீர பாசியின் நினைவாக நடைபெற்ற பகுஜன் ஸ்வபிமான் கூட்டத்தில் உரையாற்றினார்.

வீர பாசி மற்றும் டாக்டர் அம்பேத்கரை நாம் நினைவுகூருகிறோம். ஆனால், அவர்கள் முன்னிறுத்திய சித்தாந்தம் முறையாகப் பாதுகாக்கப்படுவதில்லை என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டது. ஏனெனில் நம் கண் முன்னதாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அரசியலமைப்புச் சட்டம் என்பது சாதாரண ஆவணம் அல்ல, அது அம்பேத்கர், சீர பாசி, மகாத்மா காந்தி ஆகியோரின் சித்தாந்தத்தையும், கேரளத்தின் நாராயண குரு மற்றும் கர்நாடகத்தின் பசவண்ணா போன்ற பல சீர்திருத்தவாதிகளின் பங்களிப்புகளையும் உள்ளடக்கிய ஆவணம்.

புத்தர், குருநானக் மற்றும் கபீர் ஆகியோரையும் குறிப்பிட்ட ராகுல் காந்தி அவர்களின் குரல்களும் அரசியலமைப்புச் சட்டத்தில் எதிரொலிப்பதாகக் கூறினார்.

மக்கள் சிலைகளுக்கு முன்னால் தலைவணங்கிப் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அதே வேளையில், அரசியலமைப்பின் மீதும் அது பிரதிபலிக்கும் சித்தாந்தத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும்போது மட்டும் மௌனம் சாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.