தில்லி உள்பட நான்கு மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!
பாஜக மாநில தலைவர்கள் நியமனம் தொடர்பாக..
பாஜகவின் தில்லி மாநிலத் தலைவர் உள்பட நான்கு மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் இன்று நியமித்துள்ளார்.
தில்லி பாஜக பிரிவின் தலைவராக இதுவரை வீரேந்திர சச்தேவா கட்சியின் தில்லி மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்புகளின்படி,
Advertisement
Advertisement
ஹரியாணா, பஞ்சாப் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கான கட்சித் தலைவர்களையும் நிதின் நவீன் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அர்ச்சனா குப்தா ஹரியாணா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். சர்தார் கேவல் சிங் தில்லான் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திரிபுரா மாநில பாஜக எம்எல்ஏ அபிஷேக் தேப்ராய், அம்மாநிலக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அருண் சிங் தெரிவித்தார்.