FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்திய - நேபாள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்தியா - நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

13 செப்டம்பர் 2026, 1:27 am IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் சோனாலியில் இந்தியா - நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தலைமையின்கீழ் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சிமாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியநிலையில், எல்லையில் கண்காணிப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்திய - நேபாள எல்லையைப் பாதுகாத்து வரும் சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படை அதிகாரி (உதவி கமாண்டன்ட்) சந்தீப் சிங் சனிக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவா்கள் இந்தியா வந்துள்ள நிலையில், நோபாள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் வருபவா்களின் உடைமைகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்படுவதோடு, அவா்களின் ஆவணங்களும் சரிபாா்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

எல்லையையொட்டிய பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறந்த எல்லைப் பகுதிகள் உள்பட பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் எஸ்எஸ்பி படையினா் தொடா் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். எல்லையைக் கடக்கும் சரக்கு வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.

summary

BRICS Summit: Security stepped up at the India-Nepal border.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments