FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சோகம்!

தெலங்கானாவில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானது பற்றி...

49 வினாடிகள் முன்பு
விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைப்பு - கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக குளத்தில் இறங்கிய 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படஞ்சேரு மண்டலம் பெட்டகஞ்சர்லா என்ற கிராமத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது ஆதரவற்றோர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றுள்ளனர்.

அப்போது குளத்தில் இறங்கியபோது 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

சமீபத்தில் அந்த குளத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் அதிக குழியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது, இதுதெரியாத மாணவர்கள் அதில் இறங்கியதால் நீரில் மூழ்கி இறந்தனர்.

காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Six teenagers drown during Ganesh idol immersion in Sangareddy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments