பாம்பன் அணை குறுக்கே அணை கட்டினால் போராட்டம்: வைகோ
மதிமுக பொதுச் செயலாலர் வைகோ இன்று திருப்பூரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
மதிமுக பொதுச் செயலாலர் வைகோ இன்று திருப்பூரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது முறையல்ல. 1968ம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் பாதுகாப்பில் தான் இருந்தது. அதே போல் இந்த அணையின் பாதுகாப்பை மீண்டும் தமிழக அரசின் பாதுகாப்பில் கொண்டு வரவேண்டும். தற்காலிகமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வசம் அணையின் பாதுக்பாப்பை ஒப்படைக்க வேண்டும். என தெரிவித்தார். மேலும் பாம்பன் ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது வரவேற்க தக்கதது. பாம்பன் ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்ட முயற்சித்தால் கேரள அரசை எதிர்த்து மதிமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.