முகப்பு
தற்போதைய செய்திகள்

மன்னார்குடி-ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பு

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த மன்னார்குடி-ஜோத்பூர் வாராந்திர  விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பளித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

மயிலாடுதுறைக்கு வந்தடைந்த மன்னார்குடி-ஜோத்பூர் வாராந்திர  விரைவு ரயிலுக்கு பாஜகவினர் வரவேற்பளித்தனர்.

கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் விரைவு  ரயிலின் சேவை துவக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் திங்கள்கிழமை பிற்பகல் 6-மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் இரவு 8-மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினர் அந்த ரயிலுக்கு வரவேற்பளித்தனர்.மேலும் ரயிலை இயக்கி வந்த ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர்  வழக்குரைஞர் கே.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில் கூறியது:   

காவரி டெல்டாவையும்-ராஜஸ்தான் மாநிலத்தையும் இணைக்கும் வகையில்  ரயில் சேவையை துவக்கியுள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.வாரம் ஒரு முறை இயக்கப்படவுள்ள இந்த ரயிலை 2 முறை இயக்கவும்,51 மணி நேரப் பயண ரயில் சேவையை 45 மணி நேரமாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்டப்பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு,மாவட்டப் பொருளாளர் முத்துக்குமாரசாமி,ஒன்றிய நிர்வாகிகள் ஷீதர்,குணசேகரன்,நகரத் தலைவர் செந்தில், மயிலாடுதுறை ஜெயின் சங்கத் தலைவர் கைலாஷ்சந்த் ஜெயின் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →