கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
கோயில்கள் அர்ச்சகர்களாகத் தலித்துகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு திமுக
சென்னை: கோயில்கள் அர்ச்சகர்களாகத் தலித்துகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினரை திருவிதாங்கூர் தேவசம்போர்டில் அர்ச்சகர்களாக நியமித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாராட்டுகள்.
மேலும், ஆலயங்களில் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய நீதி கட்சியின் வழித்தோன்றலான திமுக இந்த நடவடிக்கையைக் கொண்டாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.