FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் : டி.ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் என்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.

Updated On : 21 மார்ச் 2017, 9:20 pm IST
பகிர்:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் என்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது: அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம்.

எல்லோரும் சாதாரணமாக நிதி நிலை அறிக்கையை எடுத்து வந்து வாசித்துள்ளனர் என்று கூறி ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை எடுத்து வந்த முறையைக் குறிப்பிட்டார்.  அப்போது நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டுக் கூறியது:

ஓபிஎஸ் நடிப்பில் சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடுவார். ஓபிஎஸ் அளவுக்கு நாங்கள் ஆஸ்கார் விருது வாங்கும் நடிகர் இல்லை என்றார்.  இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அதே நேரம், அவரின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எழுந்து அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதனை பேரவைத் தலைவர் தனபால் ஏற்கவில்லை. 

திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து அமைச்சர் பேசியது தவறு எனக் குறிப்பிட்டனர். அதற்கு டி.ஜெயக்குமார் இதுதான் திமுக, ஓபிஎஸ் கூட்டணி என்பதுபோல சைகை காட்டினார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments