உத்தமபாளையம் அரசு தலைமை மருத்துவருக்கு கரோனா
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் வசிக்கும் 54 வயதுடைய இவர், சில நாள்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.