விழுப்புரம் மேல்மலையனூர் அருகே 1,050 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே செஞ்சியை அடுத்த கோவில் புறையூர் கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு காவலருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே செஞ்சியை அடுத்த கோவில் புறையூர் கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு காவலருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான காவலர்கள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தோப்பு ஒன்றில் 30 கேன்களில், 1,050 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அங்கிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்து காவலர்கள் எடுத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 4 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.