முகப்பு
தற்போதைய செய்திகள்

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

தவெக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாள் குறித்து டிரெண்ட் செய்துவரும் ரசிகர்கள்.

Updated On : 23 மே 2024, 9:17 pm IST
பகிர்:

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளிற்கு இன்னும் ஒருமாத காலம்மட்டுமே உள்ள நிலையில், அதனை எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர் விஜர் ரசிகர்கள்.

வரும் ஜூன் 22ஆம் தேதி, தனது 50ஆவது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து, #VIJAYBdayFestin1Month எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

தென்னிந்திய திரைப்படங்கள், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். எனவே கோலிவுட்டில் அறிமுகமாகும் ஒரு நடிகர், வளரும் நடிகர் மற்றும் முன்னணி நடிகர் என படிப்படியாக உயர்ந்து திரையுலக உச்சியில் இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதை சாதித்துக் காட்டியவர் தான் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக கோடிக்கணக்கான மக்கள் மனதில் வாழும் நடிகர் விஜய்.

Advertisement

Advertisement

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து நிற்கும் தளபதி விஜய்யின் இடத்தினை யாராலும் நிரப்பிட முடியாது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற பல படங்கள் விஜய்யின் திரைப்பயணத்தில் இன்று வரை சிறந்த படங்களாக இருக்கின்றன.

மேலும் 2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தவெக தலைவர் விஜய் அவர்கள், விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 2ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இவ்விழாவினை, ’தனது பிறந்த நாளுக்குள்ளாக (ஜூன் 22) நடத்த வேண்டும்’ என கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார், தவெக தலைவர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments