முகப்பு
தற்போதைய செய்திகள்

அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே ஆண், பெண் சடலம்.. விரிவான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது கேரள காவல்துறை!

சதீஷ் மோனிஷா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு சதீஷும் இரண்டு குழந்தைகளும் திரிசூரில் உள்ள சதீஷின் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்,

Updated On : 30 செப்டம்பர் 2019, 4:26 pm IST
பகிர்:

ஆலுவாவின் தொட்டக்கட்டுக்கராவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நான்கு நாள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் திங்கள்கிழமை விசாரணையை விரிவுபடுத்தினர். கடந்த சனிக்கிழமையன்று, பாலக்காட்டில் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் (33), திரிசூரைச் சேர்ந்த மோனிஷா (25) ஆகியோரின் சடலங்கள் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே கிடந்த நிலையில் காணப்பட்டன. "மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த சம்பவத்தை தற்கொலை என்று கூற முடியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ஏனெனில் இது சந்தேகத்திற்கிடமான கொலை வழக்கு எனக் குறிப்பிடும் போதுமான உள்ளீடுகள் உள்ளன," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இந்த வழக்கின் விசாரணையை எர்ணாகுளம் கிராமப்புற எஸ்.பி. கே கார்த்திக் கண்காணித்து வருகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளே இருந்து பூட்டப்படவில்லை, காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்தபோது அவர்கள் திறந்த வெளியில் கிடந்தனர்.  தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடத்திலிருந்து அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளனர்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களிலிருந்து காவல்துறையினர் காட்சிகளைச் சேகரித்ததுடன், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட மோனிஷா மற்றும் ரமேஷின் மொபைல் போன்களின் அழைப்பு விவரங்களையும் ஆராய்ந்தனர்.

Advertisement

Advertisement

"இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை நாங்கள் விசாரித்து வருகிறோம். இரண்டு நபர்களும் அடிக்கடி குடியிருப்பை பார்வையிட்டனர்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகைப்படம் மற்றும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை நடத்துவதற்காக மோனிஷாவின் கணவர் சதீஷ் இந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். அலுவாவில் மொபைல் டெக்னீசியன் வேலை செய்து கொண்டிருந்த ரமேஷ், ஸ்டுடியோ வேலைகளுக்காக இங்கு பணிபுரிந்தார். சதீஷ் மோனிஷா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு சதீஷும் இரண்டு குழந்தைகளும் திரிசூரில் உள்ள சதீஷின் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர், அதே நேரத்தில் மோனிஷா தொடர்ந்து குடியிருப்பில் தனியாகத் தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த அறிக்கையின்படி, புதன்கிழமை பரவூர் சந்திப்பில் உள்ள ஒரு கடையில் இருந்து மோனீஷா கடைசியாக மளிகை பொருட்களை வாங்கியதைக் கண்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.