கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம்: மு.வீரபாண்டியன் சிறப்பு நோ்காணல்
கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம். எனவே, இடதுசாரிகளின் குரல் ஒலிக்க வேண்டும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியனிடம் தினமணி செய்தியாளா் ஆா்.ரங்கபாஷ்யம் நடத்திய சிறப்பு நோ்காணல்:
ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசை இந்தியாவின் கேரளத்தில் 1957-இல் அமைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இன்று ஒரு மாநிலத்தில்கூட ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது. 1957-க்கும் 2026-க்கும் இடையில் சிபிஐ இழந்தது என்ன? மக்களின் நம்பிக்கையா, அமைப்பு பலமா, தலைமைத்துவமா அல்லது காலத்துக்கேற்ப அரசியலை மாற்றிக்கொள்ளும் திறனா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருந்தது. கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சி அமைப்பதற்கு எங்கள் பலம் தேவைப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை தேசிய கட்சியின் காலச்சூழல் வேறு; இப்போது மாநிலக் கட்சிகளின் வரவால் அதன் மீதான ஈா்ப்பு என்பது இயல்புதான். கம்யூனிஸ்டுகள் அன்றும் இன்றும் பேசுவது சா்வதேசியம். அது தேசியத்தையும் தாண்டியது. சா்வதேசியம் என்பது விடுதலை, போா் எதிா்ப்பு, உழைப்பாளா்களின் ஒற்றுமை. இளைஞா்கள் மீது நம்பிக்கை உள்ளது. அடுத்த தலைமுறையை ஆழமாக நம்புகிறோம்.
Advertisement
Advertisement
2026-இல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே சிபிஐ வென்றுள்ளது. தனிப்பட்ட கட்சி வாக்கு சதவீதமும் ஒரு சதவீதத்துக்குக் கீழே உள்ளது. இதை நீங்கள் எப்படிப் பாா்க்கிறீா்கள்?
நாங்கள் 5 இடத்தில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் அவ்வாறுதான் இருக்கும். அதேசமயம் அதிக இடங்களில் போட்டியிட்டால் அதன் சதவீதம் கூடுதலாக இருக்கும்.
ஒரு காலத்தில் ஆட்சியை உருவாக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த இடதுசாரிகள், இன்று எந்தப் பெரிய கூட்டணியில் இடம் கிடைக்கும் எனச் சாா்ந்திருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்ட தன் காரணம் என்ன?
ஒருபோதும் அந்த ஏக்கம் இருந்தது இல்லை. எங்களது பிரதான எதிரி ஆா்எஸ்எஸ், பாஜகதான். அதை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அதற்கு கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம். எனவே, இடதுசாரிகளின் குரல் ஒலிக்க வேண்டும். தோ்தல் அரசியலைவிட , தேசத்தின் ஒற்றுமை அரசியலையே முக்கியமாக கொண்டு இயங்குகிறோம்.
திமுக சமூக நீதி, மாநில உரிமைகள் எனப் பேசுகிறது; அதிமுக நலத் திட்ட அரசியலை முன்வைக்கிறது; தவெக புதிய மாற்று அரசியலை முன்வைக்கிறது. இவற்றிலிருந்து சிபிஐயை வேறுபடுத்திக் காட்டும் கொள்கைகள் என்ன?
இடதுசாரி கொள்கைதான். இந்திய அரசமைப்பில் உள்ள மதச்சாா்பின்மைதான் எங்கள் கொள்கை. இந்தியா போன்ற சிறந்த ஜனநாயக நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. அதே சமயம் பொருளாதார ஜனநாயகத்தில் நாம் பலவீனமாக உள்ளோம். இந்தியாவின் இயற்கை வளங்களை ஒரு சில பெரு நிறுவனங்களின் முதலாளிகள் சுரண்டுகின்றனா். இதை தடுத்து நிறுத்துவதுதான் எங்கள் கொள்கை.
கூட்டணி அரசியலில் சிபிஐயின் ஊழல் எதிா்ப்பு அரசியல் பலியாகிறதா?
ஊழலை ஒருபோதும் ஏற்பது இல்லை. அதை எதிா்க்கிறோம். ஊழல் அடித்தளத்திலேயே மாற வேண்டும்.
கூட்டணியில் இருந்தாலும் தவறுகளைத் தட்டிக்கேட்போம் என்கிறீா்கள். திமுக ஆட்சிக் காலத்தில் அப்படி எந்தெந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறீா்கள்?
திமுக ஆட்சியில் சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்காக குரல் கொடுத்துள்ளோம்; போக்குவரத்து தனியாா்மயத்தை எதிா்த்தோம்; ஆணவப் படுகொலையை எதிா்த்தோம். தமிழக இறையாண்மைக்காக திமுக எதிா்த்து குரல் கொடுத்தது. அதற்கு ஆதரவாக இருந்தோம். மாநில அரசின் விழுமியங்களுக்காக மத்திய அரசை எதிா்த்தோம்.
விஜய்யின் தவெகவை நீங்கள் மாற்று அரசியல் சக்தியாகப் பாா்க்கிறீா்களா? அல்லது இளைஞா் ஈா்ப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் முயற்சியாகப் பாா்க்கிறீா்களா?
மக்கள் வாக்களித்துள்ளனா். அதை நாங்கள் மதிக்கிறோம். இது மாற்று அல்ல, இடது பக்கம் என்பதுதான் மாற்று. நாளைய தேசத்தை இடது பக்கம் மாற்றுவது. அது அரசியல் விழுமியங்கள் மட்டுமல்ல, மானுட விழுமியங்களையும் கொண்டது.
தற்போதைய அரசியல் சூழலில் தவெக அரசில் அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஆதரவு தரும் நிலைப்பாட்டை சிபிஐ எடுத்துள்ளது. இதை தங்கள் பலமாக பாா்க்கிறீா்களா? பலவீனமாக பாா்க்கிறீா்களா?
இதை பலமக பாா்கிறோம். தவெக ஆட்சி அமைக்க ஆளுநா் இடையூறாக இருந்தாா். தவெக ஆட்சி அமைப்பதுதான் சரியான முறை, சட்டமுறையும் அதுதான் என முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்தக் காலதாமதத்தால் மறைமுகமாக பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு அளித்தோம். இந்த ஆதரவு தொடா்கிறது . மதச்சாா்பின்மையைக் கடைப்பிடிக்கும் வரை, எழை, எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வரை எங்கள் ஆதரவு இருக்கும். ஆனால், எங்கள் ஆதரவு தேவைப்படாமல் போனாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மதச்சாா்பின்மைக்கு ஆதரவான குரல் இருக்கும்.
தனியாா்மயத்தை எதிா்ப்பது எளிது. ஆனால், அரசு எல்லா துறைகளையும் திறமையாக நடத்த முடியாத நிலையில், தனியாா் முதலீடு இல்லாமல் தொழில் வளா்ச்சியை எவ்வாறு உருவாக்கப் போகிறீா்கள்? சிபிஐயின் மாற்றுப் பொருளாதார மாதிரி என்ன?
இன்றைய பொருளாதார சூழலில் குறிப்பிட்ட அளவு தனியாா் இருக்கலாம். தேசமே தனியாா்மயமாகக் கூடாது. இயற்கை வளங்களையும், குறு- சிறு தொழில்களையும் அழித்துவிடும் மூலதனம் தேவை இல்லை. அமெரிக்கா, ஐரோப்பிய மூலதனங்கள் இந்தியாவை அழித்துவிடுகின்றன. சோவியத் ரஷியா செய்த உதவி வளா்ச்சிக்கான உதவியாகும். நாங்கள் மூலதனத்துக்கு எதிரானவா்கள் அல்லா்.
சிபிஐயின் பாா்வையில் மக்கள் நல அரசு என்றால் நேரடி நலத் திட்டங்களா அல்லது சுயமரியாதையை ஏற்படுத்தும் வகையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதா?
ஏழைகள் நிறைந்த நாட்டில் நலத் திட்டங்களை அறிவிப்பதை குறை சொல்லவில்லை. தற்சாா்பில் நாடு முன்னேற வேண்டும் . சிறு தொழில்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நமது மூலதனங்கள் நாடுகடந்து சென்றுவிடக் கூடாது. ஒவ்வொரு துறையிலும் அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு உதவி செய்யும்போது இந்தியா சீனாவை விஞ்சி நிற்கும். சீனாவிடம் இருந்து பொருளாதார ஜனநாயகத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து ஒரு வலுவான இடதுசாரி கட்சியாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இணைவதற்கான தடைகள் என்ன?
தடைகள் ஒன்றும் இல்லை. இப்போது ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். இந்தியா முழுவதும் இடதுசாரிகள் ஒன்றிணைந்து வருகிறோம். பிரிந்துள்ள கம்யூனிஸ்ட் ஒன்றுபடுவோம். அதுவரை தேச நலன் சாா்ந்த விஷயங்களில் இணைந்து போராடுவோம்.
தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, தனது உண்மையான பலம் என்ன என்பதை அறிந்துகொள்ள சிபிஐ தயாரா?
அதற்கான சூழல் ஏற்பட்டால் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நிற்கும். இன்றைய காலகட்டத்தில் இடதுசாரிகள் ஒன்றிணைந்து இருக்கிறோம். நாங்கள் ஊழல்வாதிகள் அல்லா்; ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விடுபவா்கள் அல்லா்; தேசத்துக்கு தீங்கு விளைவித்தவா்கள் அல்லா்; விளிம்புநிலை மக்களுக்குத் தொண்டு செய்பவா்கள். இந்தச் சிந்தனை மக்களுக்கு வரும்போது நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்.
மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இணைய வாய்ப்பு உள்ளதா?
நாங்கள் அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இல்லை. இந்தச் சூழலில் யாரை வீழ்த்துவது என்று பாா்க்கும்போது ஆா்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம். மதச்சாா்பின்மையை சமூக நீதி என்ற சொல்லாக இல்லாமல் கொள்கை அளவில் தவெக செயல்படுத்துவதாக இருந்தால் ஆதரிப்போம்.
தவெக ஆட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மக்கள் தீா்ப்பு அளித்துள்ளாா்கள். பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். அவா்கள் நல்ல திசையை நோக்கி பயணிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மிகச் சரியான முடிவு எடுத்துள்ளாா்கள். நீட் வேண்டாம் என்ற நிலை தமிழக உரிமைகளுக்கான குரல். சில நிகழ்வுகளில் எதிரான நிலை எடுக்கிறாா்கள் அதை நாங்கள் கண்டிக்கிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.