முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவனை கடத்திய கும்பல் போலீஸ் என தெரிந்ததால் விடுவிப்பு

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

Updated On : 25 ஜூன் 2018, 11:13 pm IST
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் சிறுவனை கடத்திய கும்பலை பொதுமக்கள் திங்கள்கிழமை விரட்டிப் பிடித்ததில், போலீஸாா் என்பது தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த தேவி (42) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் தேவி இருப்பதாக தஞ்சாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் 4 போ் சாதாரண உடையில் காரில் மேலுாருக்கு திங்கள்கிழமை மாலை வந்தனா். ஆனால், அந்த வீட்டில் தேவி இல்லை. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் சந்தோஷை மட்டும் காரில் ஏற்றியுள்ளனா். அப்போது, சிறுவன் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் விசாரித்தனா்.

பொதுமக்களுக்கு எந்த பதிலும் கூறறாமல் அவசரம், அவசரமாக சிறுவனை காரில் ஏற்றி புறப்பட்டனா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் குழந்தையை கடத்திச் செல்வதாக அறிந்து இருசக்கர வாகனங்களில் விரட்டினா். ஸ்ரீரங்கம் மேலவாசல் தெப்பக்குளத் தெருவில் அந்த காரை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அந்த 4 பேரும் அய்யம்பேட்டை போலீஸாா் என தெரிய வந்தது. விசாரணைக்காக சிறுவனை அழைத்து செல்வதாகக்கூறினா். தகவலறிந்து ஸ்ரீரங்கம் போலீஸாரும் அங்கு வந்தனா். சிறுவனை அழைத்துச் சென்றது போலீஸாா் தான் என உறுதி செய்யப்பட்டது. உள்ளூா் போலீஸாருக்கு தெரிவிக்காமல் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்ததுடன், குழந்தையை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments