FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. பவுன் ரூ.45,760-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையானது.

Updated On : 14 ஏப்ரல் 2023, 10:40 am IST
பகிர்:

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஏப்ரலில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் விலை ஏப்.5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் தங்கத்தின் விலை குறைந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மூன்று நாள்கள் குறைந்து வந்த தங்கத்தின் விலை, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிகரிக்க தொடங்கியது.

இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை பவுன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு நாள்கள் அதிகரித்து வந்த தங்கம், வியாழக்கிழமை சற்று குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கும் பவுனுக்கு ரூ.32 குறைந்து 45,408-க்கும் விற்பனை ஆனது.

24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,124-க்கும் பவுன் ரூ.48,992-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.81,800-க்கும் விற்பனையாகியது.

அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை... வியாழக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலை, இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,720-க்கும், பவுன் ரூ.45,760-க்கும் விற்பனையாகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments