முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து 60 டன் நிவாரணப் பொருள்கள்!

ஜமைக்கா தீவுக்கு இந்தியா சார்பில் 60 டன் அளவிலான நிவாரண பொருள்கள் அனுப்பப்படுவதைப் பற்றி..

Updated On : 15 டிசம்பர் 2024, 8:48 am IST
ஜமைக்கா பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

புதுதில்லி: கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜமைக்காவின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யவும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும் மனிதநேய அடிப்படையில் இந்தியா சார்பில் இந்த பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை (டிச.14) அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது,

Advertisement

Advertisement

ஜமைக்கா நாட்டின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேலும் சூறாவளி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும்; அவசரக் கால மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட 60 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு அனுப்பபடுகின்றன என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜமைக்கா நாட்டு பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ் இந்தியாவிற்கு முதல்முறையாக கடந்த செப். 30 முதல் அக். 3 வரை வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments