FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கர்நாடகாவில் சிலிண்டர் விபத்தில் பலியான அயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..

Updated On : 27 டிசம்பர் 2024, 4:16 pm IST
- vanishri
பகிர்:

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடந்த திங்களன்று (டிச.23) சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 9 பேரும் கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று (டிச.25) இரண்டு பேர் பலியானார்கள்.

Advertisement

Advertisement

இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஐயப்ப பக்தரான ராஜு மூகேரி (வயது-16) என்ற சிறுவன் இன்று (டிச.27) சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதனால், இந்த விபத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் அம்மாநில தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும், சிகிச்சைப் பெற்று வரும் 6 ஐயப்ப பக்தர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments