vanishri
தற்போதைய செய்திகள்

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கர்நாடகாவில் சிலிண்டர் விபத்தில் பலியான அயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..

DIN

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடந்த திங்களன்று (டிச.23) சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 9 பேரும் கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று (டிச.25) இரண்டு பேர் பலியானார்கள்.

இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஐயப்ப பக்தரான ராஜு மூகேரி (வயது-16) என்ற சிறுவன் இன்று (டிச.27) சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதனால், இந்த விபத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் அம்மாநில தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும், சிகிச்சைப் பெற்று வரும் 6 ஐயப்ப பக்தர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT