'பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்த கண்மணிக்கும், பிரபல தொகுப்பாளர் அஷ்வத்துக்கும் நேற்று(ஜூலை 3) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன். பின்னர் இத்தொடரிலிருந்து திடீரென்று விலகினார்.
கண்மணி மனோகரனை அவரது ரசிகர்கள் ஸ்வீட்டி என்ற அன்போடு அழைத்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அதிகம் பின்தொடர்பவர்கள் கொண்ட சின்னத்திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இத்தொடரில் அமுதா, பவானி என்ற இரண்டு பாத்திரங்களிலும் கண்மணி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கண்மணி மனோகரனுக்கு பிரபல தொகுப்பாளரான அஷ்வத் என்பவருடன் நேற்று (ஜூலை 3) நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் அஷ்வத். இவர்கள் நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில், உற்றார் உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கண்மணி மனோகரன் - அஷ்வத் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.