FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2024, 2:51 pm IST
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகிர்:

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், 19 சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா 65,199 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இதையடுத்து திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

திமுக மூத்த தலைவர்கள் பலரும் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இந்த நிலையில், அறிவாலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ்து தொடர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments