FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சார ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து

Updated On : 27 ஜூலை 2024, 10:31 am IST
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு நாள்களுக்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

Advertisement

Advertisement

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணி வரை செல்லும் ரயிலும், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதுபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments