முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சார ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து

Updated On : 27 ஜூலை, 2024 at 5:01 AM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரண்டு நாள்களுக்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணி வரை செல்லும் ரயிலும், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதுபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →