சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த புயல்சின்னம் தமிழகம் நோக்கி நகர்ந்துள்ள தகவல் தெரியவந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!
இந்த நிலையில், மழை காரணமாக, சென்னையில் இருந்து தில்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், இன்று(நவ. 12) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.