தற்போதைய செய்திகள்

15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைகிறது.

DIN

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடக்கிவைத்து, தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறார்.

பின்னா் அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் அரியலூா்-பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வருகை தந்துள்ளதையடுத்து, பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் குஞ்ச் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

கிழக்கு தில்லியில் கொள்ளையின்போது கத்திக் குத்து: இரண்டு சிறாா்கள் கைது

ஐஜிஎல் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த இணைய மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

கிரிவலம்: திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 1-இல் சிறப்பு ரயில்

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

SCROLL FOR NEXT