இன்று(செப். 10) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,736 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,706 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு நீரின் தேவை அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 115.45 அடியிலிருந்து 114.91 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.