கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முழுதும் குரூப் 2 தோ்வு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 பிரிவில் 507 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 1,820 காலியிடங்கள் என 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா். இதில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்கள், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்கள், 51 மூன்றாம் பாலினத்தவர் தோ்வெழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 763 மைங்களில் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்த மையங்களில் 2, 700-க்கும் மேற்பட்ட முதன்மை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறுகிறது.

விரைவில் முடிவுகள்

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடைமுறைகள் விடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வு முடிவுள் விரைவாக வெளியிடுவதற்காக கூடுதலாக ஸ்கேனிங் இயந்திரங்கள், பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT