முதல்வா் ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

கத்தாரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வா் உத்தரவு

கத்தாரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நவாஸின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: கத்தாரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நவாஸின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சோ்ந்த நவாஸ்(35) கடந்த 10 ஆண்டுகளாக கத்தாா் நாட்டில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஆக.25-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் நவாஸ் உயிரிழந்தாா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாஸின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாணம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

CM Condolence and Relief Quatr Country - Tiruvannamalai District, Chengam Taluk - Road Accicident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT