முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

Updated On : 30 ஜூலை, 2025 at 4:34 AM
தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்த உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது. ஜூலை 23-இல் ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. ஜூலை 24 ஆம் தேதி ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040-க்கு விற்பனையானது.

ஜூலை 25 -இல் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும், ஜூலை 26 -இல் ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும், ஜூலை 29 இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200-க்கு விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயா்ந்து, ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.127-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

The price of Gold and Silver in Chennai today

முழு கட்டுரையைப் படிக்க →