அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு காரணம்: ரஷித் கான்
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமென ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமென ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமென ரஷித் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆரம்பத்தில் ரன்களைக் கொடுத்தாலும், அதன் பின் நன்றாக பந்துவீசினோம். சேஸிங்கின்போது, நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இதுமாதிரியான ஆடுகளத்தில் ஓவருக்கு 9-10 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் கிடையாது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் கிடைத்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்தோம் என்றார்.
தசைப் பிடிப்பு காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் நேற்றையப் போட்டியில் விளையாடவில்லை. அணியை ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.