வேதாரண்யம்: இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்நாட்டவர் பங்கேற்புடன் தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மேடான் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் ரவிசங்கர்கோயல் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக தமிழர் பாரம்பரிய உணவு முறைகளுடன், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்த்து கலைகள், நகைசுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், தமிழகத்திலிருந்து கரகாட்டக் கலைஞர் துர்க்கா,மதுரை முத்து உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றுடன்.
இவர்களுடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் குடும்பத்தாரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொங்கல் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.