மீட்கப்பட்ட அம்மன் சிலை  
தற்போதைய செய்திகள்

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டது தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

சூலூா்: சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டனா்.

சூலூா் அருகேயுள்ள அயோத்தியாபுரத்தில் அம்மன் சிலை ஒன்று சாலையோரத்தில் புதன்கிழமை இரவு கிடந்துள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சிலை எடுத்துவைத்து அங்கேயே வழிபாடு நடத்த முயற்சி செய்தனா்.

தகவல் அறிந்த சூலூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை மீட்க முயன்றனா். அப்போது, அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் உதவியுடன் சிலையை மீட்ட அதிகாரிகள், பாப்பம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

சிலையை மா்ம நபா்கள் வீசிச் சென்றனரா அல்லது பழங்கால சிலையா என்பது குறித்து அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

An Amman idol found lying on the roadside near Sulur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT