தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் யார்?
தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் யார்? என்பது குறித்து...
1952 முதல் தற்போது வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகுடம் சூடி நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் வரிசையில் திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார்
1952-இல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்றார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிப்புகள் எழுந்ததை அடுத்து முதல்வர் ராஜாஜி, தனது பதவியை ராஜிநாமா செய்த பிறகு, காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து காமராஜர் தொடர்ந்து 3 முறை முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தார்.
Advertisement
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலுவிழந்து வந்ததையடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற காமராஜர் திட்டத்தின் கீழ்(கே-திட்டம்) 1963 இல் காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் அறிஞர் அண்ணா. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். புற்றுநோயால் பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து 1971 பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்த நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இதனிடையே, திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக எனும் புதிய கட்சி தொடங்கி எம்ஜிஆர் 1977 பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். 1980, 1984 பேரவைத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற எம்ஜிஆர் சுமார் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1991 பேரவைத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்று முதல்முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 14 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளால் இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்தார். இருப்பினும், 2011-க்குப் பிறகு 2016 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், 2021 பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று கூறி பதவியேற்றது தமிழக அரசியலில் பெரும் பேசும்பொருளானது.
இதையடுத்து தமிழகத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், காமராஜர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.