FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ரசிக்க... ருசிக்க...

வடநாட்ல இதை லஞ்ச்னு சொல்லிக்கிறாங்க, நமக்கெல்லாம் இது வெறும் ஸ்னாக்ஸ் மட்டும் தான்!

டிஃபரண்ட்டா இருக்கேன்னு வீட்ல ட்ரை பண்ணிப் பார்த்தேன். நிஜமாவே நல்லாத்தாங்க இருக்கு. ரொம்ப அதிக செலவெல்லாம் இல்லை. 2 கப் வேக வைத்த சாபுதானா தான் மெயின்.

Updated On : 25 மே 2019, 4:14 pm IST
பகிர்:

சாபுதானா கிச்சடி... அதாங்க ஜவ்வரிசி கிச்சடி அதைத் தான் இந்தியில சாபுதானா கிச்சடிக்கிங்றாங்க. அந்தக் கிச்சடி டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு ஸ்ட்ரீட் ஃபுட் சேனல் ஒன்னு சொல்லுச்சு. டிஃபரண்ட்டா இருக்கேன்னு வீட்ல ட்ரை பண்ணிப் பார்த்தேன். நிஜமாவே நல்லாத்தாங்க இருக்கு. ரொம்ப அதிக செலவெல்லாம் இல்லை. 2 கப் வேக வைத்த சாபுதானா தான் மெயின். கூட கொஞ்சம் சாட் மசாலா, பேல்பூரி (ஓமப்பொடி) புதினா, மல்லித்தளை 2 டீஸ்பூன், அரை மூடி லெமன் சாறு இவ்ளோ தான் முடிஞ்சது கிச்சடி வேலை. மொத்தக் குடும்பத்துக்கும் தேவையான சத்தான மாலைச் சிற்றுண்டி ரெடி.

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரசி : 2 கப்
  • பெரிய வெங்காயம்: 1 பொடியாக நறுக்கியது
  • சாட் மசாலா: 2 டீஸ்பூன் (காரம் தேவைப்படுவதற்கு ஏற்ப)
  • ஓமப்பொடி அல்லது மிக்ஸர்: 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா மல்லித்தளை: 2 டீஸ்பூன்
  • லெமன் சாறு: அரைமூடி 
  • உப்பு: தேவையான அளவு

செய்முறை:

Advertisement

Advertisement

முதலில் ஜவ்வரிசியை ஊற வைத்து மிருதுவாக ஆனதும் தேவையான பதத்தில் வேக வச்சு எடுத்துகனும். பிறகு வெந்த ஜவ்வரிசியில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் பதமாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாற வேண்டியது தான். சுவை அள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால், அளவோடு நிறுத்திகனும். இல்லைன்னா திகட்டிடும். வாரம் ஓரிரு நாட்கள் எளிதா செய்து சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வெரைட்டி இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments