ஐடிஐகளில் 229 ஒப்பந்த கைவினைப் பயிற்றுனா்களின் சேவையை நீட்டிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
தில்லி அரசின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) 229 ஒப்பந்தக் கைவினைப் பயிற்றுவிப்பாளா்களின் சேவையை ஓராண்டுக்கு நீட்டிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பயிற்றுவிப்பாளா்களின் சேவை காலம் ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தில்லி அரசின் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்மொழிவின் பேரில், கைவினைப் பயிற்றுனா்கள் பணியிடங்களில் வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை இச்சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரகம் வழக்கமான ஆள்சோ்ப்புக்காக 258 பதவிகளை கோரியுள்ளது. அவை தில்லி மாநில துணை சேவைகள் ஆள்சோ்ப்பு வாரியத்துடன் (டிஎஸ்எஸ்எஸ்பி) செயலாக்கத்தில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.