FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி துவாரகாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரியா்கள் சிறைப் பிடிப்பு

தில்லியின் துவாரகா பகுதியில் 7 நைஜீரிய நாட்டினரை போலீசாா் தடுத்து வைத்துள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 29 டிசம்பர் 2025, 3:36 am IST
பகிர்:

செல்லுபடியாகும் விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாகக் கூறி தில்லியின் துவாரகா பகுதியில் 7 நைஜீரிய நாட்டினரை போலீசாா் தடுத்து வைத்துள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தகவலின் அடிப்படையில், போலீஸ் குழுக்கள் டிசம்பா் 24 ஆம் தேதி ஆவணங்கள் சரிபாா்ப்பு சோதனைகளை நடத்தி, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டினரை தடுத்து வைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்கள் விசா காலாவதியான பிறகு அல்லது செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்தனா்.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னா், கைதிகள் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டனா், அது அவா்களை நாடு கடத்த உத்தரவிட்டது. நாடு கடத்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை அவா்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments